நயன்தாராவுடனான, காதல் முறிந்ததால், சில காலம், ரொம்பவும் நல்ல பிள்ளையாக அடக்கி வாசித்த சிம்பு, மீண்டும் காதல் வலையில் சிக்கியுள்ளதாக, கோடம்பக்கம் வட்டாரங்கள் கும்மியடிக்கின்றன. வாலு என்ற படத்தில், சிம்பு, சந்தானம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார், ஹன்சிகா. இவர்கள், இருவருக்கும் இடையே, காதல் தீ பற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், படக் குழுவினரோ, ' படப் பிடிப்பு இடைவெளியில், சக நடிகர்கள், ஜாலியாக பேசிக் கொள்வது, சாதாரண விஷயம். இதை, 'பில்டப் செய்து, யாரோ, கதை கட்டி விட்டுள்ளனர். மற்றபடி, இருவருக்கும் இடையே, காதல் எதுவும் இல்லை என்கின்றன. இதுகுறித்து, சிம்புவும், ஹன்சிகாவும் வெளிப்படையாக கூறினால் தான். உண்மை தெரியவரும் என்கின்றன கோலிவுட் வட்டாரங்கள்
MANASARA.COM
நன்றே செய் அதை இன்றே செய்
செவ்வாய், ஏப்ரல் 30, 2013
திங்கள், ஏப்ரல் 29, 2013
அமெரிக்காவில் ஆறாவது திருமண நாளை கொண்டாடிய அபிஷேக் -ஐஸ்வர்யா
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக்பச்சனும், உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யாராயும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். என்றாலும், அதன்பிறகும் சினிமாவில் நடித்து வந்த ஐஸ்வர்யாராய், பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக நடிப்பதை நிறுத்தி விட்டு, ஆரத்யா என்ற மகளை பெற்றார். இப்போது ஆரத்யாவுக்கு ஒன்றரை வயது ஆகிறது. இந்நிலையில், சமீபத்தில் தங்களது ஆறாவது திருமண நாளை கொண்டாடுவதற்காக அபிஷேக்-ஐஸ்வர்யா தம்பதியினர் ஆரத்யாவுடன் அமெரிக்கா சென்றனர். 15 நாட்களுக்கு மேலாக அமெரிக்காவில் ஜாலி டூர் மேற்கொண்ட அவர்கள், சில தினங்களுக்கு முன்பு மும்பை திரும்பினர். அப்போது, அவர்களின் வருகையை அறிந்திருந்த மீடியாவினர் விமான நிலையத்திலேயே சுற்றி வளைத்துக்கொண்டனர். அதனால் இதுவரை தனது மகள் ஆரத்யாவை மீடியா கண்களில் அதிகமாக படாமல் வைத்திருந்த ஐஸ்வர்யாராய், முதன்முதலாக மகளை கேமரா கண்களுக்கு காண்பித்திருக்கிறார். பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்கள் தங்களது வாரிசுகளை வெளி உலகத்துக்கு தெரியாமல்தான் வளர்ப்பார்கள். ஆனால், அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யாராய் தம்பதி இதிலிருநது மாறுபட்டு மகளை வெளி உலகத்துக்கு காண்பித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது
பிரியாணியை சாப்பிட்டு விட்டு அடுத்த சில நாட்கள் விரதமிருப்பாராம் - த்ரிஷா
என்னதான் நடிகைகள் லட்சம் லட்சமாக சம்பாதித்தாலும் அவர்களால் ஆசைப்பட்ட பொருளை சாப்பிட முடியாது. எல்லாம் இருந்தும் வாயக்கட்டி வயிற்றக்கட்டி வாழ்ந்து கொண்டிருப்பார்கள். கொஞ்சம் அசந்தாலும் உடம்பு பெருத்து விடும் என்பதால், தினமும் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்பதை கடைபிடித்து வருவார்கள். ஆனால், த்ரிஷா மற்ற நடிகைகள் மாதிரி உடம்பு பெருத்து விடுமே என்று கவலைப்படுவதெல்லாம் இல்லையாம். முக்கியமாக பிரியாணியை கண்ணில் பார்த்து விட்டால், செம கட்டு கட்டி விடுவாராம். அந்த அளவுக்கு பிரியாணி பிரியையாம் த்ரிஷா. ஆனால், அப்படி சாப்பிடுபவர், உடம்பில் கொழுப்பு சேர்ந்து விடக்கூடாதே என்பதற்காக அடுத்த சில நாட்கள் விரதமிருப்பவர், கடினமான உடற்பயிற்சியும் செய்வாராம். அதனால்தான், த்ரிஷாவின் உடல்கட்டு அவரது கண்ட்ரோலில் இருக்கிறதாம்.
புதன், ஏப்ரல் 24, 2013
லிங்குசாமியின் இயக்கத்தில் தீபிகாவுடன் ஜோடி சேரும் கமல்
விஸ்வரூபம் ரிலீஸாவதில் பிரச்சனை ஏற்பட்டபோது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் இருந்து முதன்முதலாக கைகொடுத்தவர் லிங்குசாமி. அதற்கு நன்றிக்கடனாக லிங்குசாமியில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக கமல் இயக்கி நடிக்கும் ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் கமல் ஜோடியாக தீபிகா படுகோனே நடிப்பார் என லிங்குசாமியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாஸன் நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்கித் தயாரிக்கிறார் என்று செய்திகள் கிளம்பியுள்ளன. விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் முயற்சிகளில் தீவிரமாக உள்ளார் கமல்ஹாஸன். இந்தப் படத்துக்குப் பிறகு ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஒரு படம் செய்து கொடுப்பார் என்று கூறப்பட்டது. இன்னொரு பக்கம், அவரது ஹாலிவுட் பட முயற்சிகளையும் இந்த ஆண்டு இறுதியில் மேற்கொள்வார் என்று கூறி வந்தனர். ஆனால் எதுவும் உறுதியான தகவல்களாக இல்லாத நிலையில், இப்போது புது பரபரப்பு கிளம்பியுள்ளது. இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க, லிங்குசாமி இயக்கும் படத்தில் கமலிடம் பேச்சு நடத்தியுள்ளனர். கமலும் இதில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அக்ஷய் குமார் நடித்த ஒரு இந்திப் படத்தை ரீமேக் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கமல் அதை விரும்பாததால் புதிய கதையை சொன்னாராம் லிங்குசாமி. கமலுக்கும் கதை பிடித்துப் போனதால், ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகக் கூறப்படுகிறது
தொடர்ந்து நடிக்கும் ஆசையில் குழந்தை பெறத் தயங்கும் நடிகைகள்!
திரையுலகில் கடந்த ஆண்டு பிரசன்னாவை காதல் திருமணம் செய்த சினேகா 'ஹரிதாஸ்' ஓடியதில் அகம் மகிழ்ந்துள்ளார். இவர், சரத்குமார் ஜோடியாக நடிக்கும் 'விடியல்' படத்துக்கு இன்னும் சில நாட்கள் கால்ஷீட் தர வேண்டியிருக்கிறது. இந்நிலையில், மலையாளத்தில் ரிலீசான 'சால்ட் அன்ட் பெப்பர்' படத்தை 'உன் சமையல் அறையில்' என்ற பெயரில் பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்குகிறார். இப்படத்திலும் சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். இதனால், உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை என்கிறார். அதுபோல், பாலிவுட் நாயகன் ரிதேஷ் தேஸ்முக்கை காதலித்து மணந்த ஜெனிலியாவுக்கும் தொடர்ந்து நடிக்க வேண்டிய ஆசை இருப்பதால் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை என்கிறார்
'தலைவா' படத்தில் நடனக்குழுவின் தலைவராக விஜய்..
மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படம் தலைவா. இந்த படத்தின் சில டிசைன்களில் பாட்ஷா ரஜினி பாணியில் விஜய் போஸ் கொடுத்ததால், அப்படம் அரசியல் பின்னணியில் உருவாகியிருக்கலாம் என்று கணித்தார்கள். தலைப்பும் தலைவா என்று இருப்பதால் அதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஆனால், இப்போது அப்படத்தில் விஜய் என்னவாக நடிக்கிறார் என்கிற செய்தியை ஆராய்ந்தபோது, அவர் தமிழ்ப்பசங்க என்றொரு நடனக்குழுவுக்கு தலைவர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. பல ஊர்களுக்கு, நாடுகளுக்கு சென்று நடன நிகழ்ச்சி நடத்துவதுதான் அவர்களது வேலையாம். மேலும், இந்த படத்தில் தமிழ்ப்பசங்க என்றொரு பாடலும் உள்ளதாம். அவர்களின் நடனக்குழுவின் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள அந்த பாடலை ஆஸ்திரேலியா சென்று படமாக்கியுள்ளனர். அந்த வகையில் பார்த்தால் இந்த படமும் விஜய்யின் வழக்கான மசாலா படம் போன்றுதான் தெரிகிறது
வியாழன், ஏப்ரல் 04, 2013
உண்ணாவிரதத்திற்கு வராத நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை?
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நேற்று நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்துக்கு ரஜினி உட்பட கணிசமான நடிகர்கள் வந்திருந்தனர் ஆனால் நடிகைகள் பெரும்பாலானோர் வராததால் திரைத்துறையினருக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகர்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு இந்த உண்ணாவிரதத்துக்கு வந்திருந்தனர். வெளிநாட்டில் இருந்து வரமுடியாத சூழலில் விஜய் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி, உண்ணாவிரதத்துக்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்திருந்தனர். ஆனால் உள்ளூரில் இருந்த பல நடிகைகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்காமல் புறக்கணித்ததாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக நயன்தாரா, ஸ்ரேயா, தமன்னா, காஜல் அகர்வால், அசின், அஞ்சலி, ஹன்சிகா, டாப்சி, குஷ்பு, சமந்தா, கார்த்திகா, லட்சுமி மேனன் போன்றோர் உண்ணாவிரதத்துக்கு வரவில்லை. இவர்கள் தமிழ்ப் பெண்கள் இல்லை. எனவேதான் வரவில்லை என்று கூறப்பட்டாலும், தமிழ் சினிமாவில் சம்பாதித்து தமிழகத்தில் சொத்துகள் வாங்கும் இவர்கள், தமிழருக்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரதத்துக்கு வராமல் போய்விட்டார்களே என பலரும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். நடிகர்கள் பார்த்திபன், விமல், சசிகுமார், கார்த்திக், சந்தானம், கடல் பட நாயகன் கவுதம் போன்றோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை. உண்ணாவிரதம் நிறைவடைந்ததும் வராத நடிகைகள் பற்றி ரசிகர்கள் ஆவேசப்பட்டனர். தமிழ்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களால் முன்னுக்கு வந்த இவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்காதது கண்டிக்கத்தக்கது என்றனர். இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்துரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் நடந்துள்ள இனப்படுகொலைக்கு மொழிகளை கடந்த கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம். வெளிமாநில நடிகைகள் பலரை தமிழ் திரையுலகம் உச்சத்தில் தூக்கி உள்ளது. நிறைய சம்பாதித்து சென்னையில் வீடுகள் வாங்கி போட்டுள்ளனர். மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்றோரும் தமிழ் படங்களில் நடித்துள்ளனர். இவர்களும் உண்ணாவிரதத்துக்கு வராமல் புறக்கணித்தது கண்டிக்கத்தக்கதாகும். இவர்களை தமிழ் ரசிகர்கள் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
வியாழன், மார்ச் 21, 2013
ரஜினியின் பாராட்டை வென்ற தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகள்..
தெலுங்கு நடிகர் மோகன் பாபு மகள் லட்சுமி மஞ்சு கதாநாயகியாக நடித்துள்ள படம் 'மறந்தேன் மன்னித்தேன்'. இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை (22-ந் தேதி) ரிலீசாகிறது. இந்த படத்தை ரஜினிக்கு லட்சுமி மஞ்சு சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்டினார். இப்படம் பார்த்த ரஜினி மோகன்பாபு மகள் நடிப்பை வெகுவாக பாராட்டினார். இது குறித்து லட்சுமி மஞ்சு கூறும் போது, 'மறந்தேன் மன்னித்தேன்' படத்தை ரஜினி 'அங்கிள்' பார்த்தார். எனது நடிப்பு சிறப்பாக இருந்ததாக பாராட்டினார். அதோடு கதையும் சிறப்பாக இருந்ததாக வாழ்த்தினார். எனது தந்தை, மோகன்பாபுக்கு போன் செய்தும் படம் பற்றி பேசினார். தெலுங்கில் இப்படம் ஏற்கனவே ரிலீசாகி ஹிட்டாகியுள்ளது என்றார்
உண்ணாவிரதத்தில் காணாமல் போன பெரும்புள்ளிகள் - கமல், ரஜினி
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மாணவர் போராட்டம், தமிழ்த் திரையுலகினைரையும் ஒருநாள் உண்ணாவிரதம் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறது. காதல் மன்னன், சகலகலாவல்லவன், வைணவ பகுத்தறிவாளன், கதாநாயகிகள் எதிர்பாராத நேரங்களில் வாயோடு வாய் வைத்து ஹாலிவுட் தரத்தில் முத்தம் தரும் உலகநாயகன், திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்திலும் கலந்து கொள்ளவில்லை, மாணவர் போராட்டம் பற்றியும் கருத்து சொல்லவில்லை. 'அப்போ ரஜினி? ரஜினி கத தெரிஞ்சதுதான்.. அவரு எப்போதுமே 'தொடர்பு கொள்ளும் நிலை' யில் இருக்க மாட்டாரு? இமயமலையில் 'நொட் ரீச்சபுள்'தானே? அதாவது இமயமலையை அவரு ரீச் பண்ணதால, அவரு 'நொட் ரீச்சபுள்' ஆயிட்டாரு. புரியலையா? அவரே புரியாத நிலையில்தான் இருப்பாரு. அதாங்க தியானத்ல
விஜய் படத்தில் நடிக்கும் நிஷா அகர்வால்
நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலும் ஒரு நடிகை. தங்கைக்காக அக்கா காஜல் அகர்வால் வாய்ப்பு கேட்பதாக இன்டஸ்ட்ரிக்குள் வதந்தி உண்டு. இந்நிலையில் இப்படியொரு செய்தி, விஜய்யின் ஜில்லா படத்தில் காஜல் அகர்வாலுடன் நிஷா அகர்வாலும் நடிக்கிறார். ஜில்லாவின் ஸ்டார்காஸ்ட்தான் முதலிலேயே ஆச்சரியமாகப் பேசப்பட்டது. மணிரத்னம், கமல் என்று ஜாம்பவான்கள் விரும்பி அழைத்தால் மட்டுமே கேரள எல்லையை தாண்டும் மோகன்லால் ஜில்லாவில் ஒரு படம் மட்டுமே இயக்கியிருக்கும் நேசனின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது முதல் ஆச்சரியம். ஜில்லாவில் காஜல் அகர்வால் விஜய்யின் ஜோடி. பரோட்டா சூரி, தம்பி ராமையா போன்றவர்களும் உண்டு. மகத் விஜய்யின் தம்பியாக நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது காஜலின் தங்கை நிஷா அகர்வாலை மகத்தின் ஜோடியாக ஒப்பந்தம் செய்திருப்பதாக உறுதி செய்யப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விடிவி கணேஷ், கோவை சரளா ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக படாவதி ஸ்டார் சீனிவாசனும் நடிக்கிறாராம்.
புதன், மார்ச் 20, 2013
விரைவில் சித்தார்த்துடன் சமந்தாவிற்கு திருமணம்
இதுவரை வதந்தியாகவே இருந்து வந்த சித்தார்த் - சமந்தா காதல் இப்போது உறுதியாகிவிட்டது. இருவரும் விரையில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில் ஜாதகப் பொருத்தம் பார்த்ததில் அதில் ஒரு சிறிய குறை இருந்ததால் இருவரும் தங்கள் பெற்றோருடன் காளகஸ்திக்கு வந்து அந்த குறையை போக்க சிறப்பு பூஜைகளை செய்து விட்டார்கள். அடுத்து இருவரின் திருமண ஏற்பாடுகளை பெற்றோர் மும்முரமாக கவனித்து வருகிறார்கள். இருவருமே தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். மார்க்கெட்டில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இப்போது திருமணம் செய்து கொண்டால் அது பாதிக்குமே என்ற நினைக்கிறார்கள். ஆனால் பெற்றவர்கள் உடனடியாக திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று சொல்கிறார்கள். அதனால் கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்து விட்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்று தெரிகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடந்து விடும் என்கிறார்கள். தமிழ் நாட்டில் பிரசன்னா-சினேகா திருணமத்தை ஒரு தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்ப 50 லட்சம் கொடுத்தது. சித்தார்த்-சமந்தா திருமணத்தை ஒளிபரப்ப 2 கோடி வரை தர சேனல்கள் முன்வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
கஞ்சாவுக்கு கடைசி வரை கருணை காட்ட மறுத்த குத்தாட்ட நடிகை!
பெரும்பாலும் ஹீரோ நடிகர்கள்தான் தங்களுடன் நடிக்கும் நடிகைகளிடம் வாலாட்டி பார்ப்பதுண்டு. அந்த வரிசையில் சமீபகாலமாக சில காமெடி நடிகர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் அந்த காமெடி கவுண்டர், ஒரு நான்கெழுத்து கவர்ச்சி நடிகையை தனது ஆஸ்தான நடிகையாகவே வைத்திருந்தார். அவர்களை இணைத்து பல கிசுகிசு செய்திகள் பரவியபோது, மற்ற நடிகர்கள் செய்யாத தவறையா நான் செய்து விட்டேன் என்று கிண்டலாக பதிலளித்து வந்தார் நடிகர். அவரையடுத்து இப்போது முன்னணியில் இருக்கும் அந்த ஐந்தெழுத்து காமெடியனும் நடிகைகளின் சவகாசம் வேண்டும் என்பதற்காக படத்துக்குப்படம் தனக்கும் ஒரு ஜோடி வேண்டும் என்று இயக்குனர்களிடம் கண்டிசன் போட்டு, தனக்கு பிடித்தமான நடிகைகளை இணைத்து வருகிறார். இந்த நிலையில், இதுவரை நல்லவராகவும், அப்பாவித்தனமாகவும் நடித்து வந்த அந்த கஞ்சா காமெடியரும் இப்போது நடிகைகளிடம் வாலாட்டி வருகிறார். சமீபத்தில் ஒரு படப்பிடிப்புக்காக அவுட்டோர் சென்றிருந்தபோது, அதே படத்தில் கவர்ச்சியாட்டம் போட வந்த பாபி... என்ற அந்த நான்கெழுத்து வாட்டசாட்டமான நடிகையிடம் வாலாட்டினாராம். ஆனால் வெளியில மட்டுமே தனது லீலைகளை வைத்துக்கொள்ளும் அந்த குத்தாட்ட கவர்ச்சி நடிகை, கஞ்சாவுக்கு கடைசி வரை கருணை காட்ட மறுத்தாராம். இதனால், சினிமாவில காமெடியனாக நடிக்கும் அந்த நடிகர், ஒரு கட்டத்தில் வில்லன் அவதாரம் எடுத்து விட்டாராம். அதையடுத்தே மிரண்டு போன நடிகை, நடிகரின் அன்புக்கு பாத்திரமானாராம்
திங்கள், மார்ச் 18, 2013
இலங்கை அரசை எதிர்த்து போராட்டத்தில் குதிக்கிறது - தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளம்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் நடந்தது. பெப்சி தலைவர் அமீர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: * இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் இந்தியா தீர்மானம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும். * சர்வதேச போர்க்குற்றவாளி ராஜபக்ஷேவுக்கு கடும் தண்டனை வழங்க இந்தியா தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். * தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை ராணுவத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். * இலங்கை சிறைகளில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். * இலங்கை பிரச்னைக்கு தமிழ் ஈழம் ஒன்றே தீர்வானது. அதை ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். * இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதோடு, தீவிரவாதிகளை ஊக்குவித்து இந்தியாவில் நாச வேலையில் ஈடுபடும் பாகிஸ்தானை கண்டிக்கிறோம். * இலங்கை பிரச்னை தொடர்பாக மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பெப்சி ஆதரவு தரும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமீர் 'இலங்கை தமிழர்களுக்காக திரைப்படத்துறையினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இப்போது நிலைமை மோசமாகி உள்ளது. மாணவர்கள் எந்த தலைமையும் இன்றி போராட்டம் நடத்தி வருகிறார்கள். திரைப்படத்துறையில் நாங்கள் மூத்த சங்கம் என்ற அடிப்படையில் இந்த தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம். மற்ற சங்கங்களையும் ஆலோசித்து விரைவில் அடுத்த கட்ட போராட்டம் பற்றி அறிவிப்போம்' என்றார்.
நடிகை த்ரிஷா சினிமாவை விட்டு விலக முடிவு
நடிகை த்ரிஷா சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 2002ல் சினிமாவில் அறிமுகமான த்ரிஷா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். கட்டா மிட்டா என்ற இந்திப் படத்திலும் நடித்தார். சாமி, கில்லி, திருப்பாச்சி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா என்று பல படங்கள் திரிஷா நடிப்பில் வந்து வெற்றி பெற்றுள்ளன.தற்போது ஜெயம்ரவி ஜோடியாக பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் 'ரம்' படத்தில் நடிக்கிறார். இந்த மூன்று படங்கள் தவிர வேறு புதுப்படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை.இந்த வருடத்தோடு இப்படங்களை முடித்து கொடுத்து விட்டு சினிமாவில் இருந்து விலகப் போவதாக கூறப்படுகிறது.திரிஷாவுக்கு 29 வயது ஆகிறது. எனவே விரைவில் திருமணத்தை முடிக்க அவரது தாய் உமா தீவிரமாக உள்ளார்.உறவுக்கார இளைஞரை பேசி முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் இறுதியில் திருமணம் நடக்ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
முதல் முறையாக கிராமத்து பெரிய அண்ணனாக நடிக்கும் அஜீத்!
தற்போது அஜீத் விஷ்ணுவர்தனின் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அஜீத் முதன் முறையாக கிராமத்து பெரிய அண்ணனாக நடிக்க இருக்கிறார். அவரது தம்பிகளாக நடிக்கவும் நடிகர்கள் முடிவு செய்யப்பட்டு விட்டார்கள். இந்த நிலையில் படத்தின் ஸ்கிரிப்டை படித்த அஜீத், அதில் சில திருத்தங்களை சொல்லியிருக்கிறார். அதனை சரி செய்யும் பணியில் பத்து துணை இயக்குனர்களை வைத்துக் கொண்டு டிஷ்கஷன் செய்து கொண்டிருக்கிறார் சிவா. ஸ்கிரிப்ட் அஜீத்துக்கு திருப்தி தரவில்லை என்பதால் படம் தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது. விஷ்ணுவர்த்தன் படம் முடிந்த பிறகும் சிவாவின் ஸ்கிரிப்ட் அஜீத்துக்கு திருப்பி அளிக்கவில்லை என்றால் படம் டிராப் கூட ஆகலாம் என்று கூறுகிறார்கள்
ஷூட்டிங் ஸ்பாட் வரை போன பவரை பியூஸ் பிடுங்கி அனுப்பிவிட்டார் பாலா
நேற்று ரிலீசாகி, இன்று கலவையான விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பரதேசியில் ஒரு பாத்திரத்தில் நடிக்க பவர் ஸ்டாரை இயக்குநர் பாலா கூப்பிட்டிருந்ததை ஏற்கெனவே எழுதியிருந்தோம். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட் வரை போன பவரை பியூஸ் பிடுங்கி அனுப்பிவிட்டார் பாலா என்ற உண்மை தெரியுமா? பரதேசியில் கிறிஸ்துவ டாக்டராக வருகிறாரே சிவசங்கர் மாஸ்டர்.. அந்த ரோலுக்கு முதலில் அழைக்கப்பட்டவர் பவர் ஸ்டார்தானாம். அலுவலகத்துக்கு வரவழைத்து, ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் எடுத்து ஓகே செய்த பாலா, குறிப்பிட்ட தேதியில் ஸ்பாட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார். அதற்குள் தன்னால் முடிந்த அளவு பப்ளிசிட்டியை செய்துவிட்ட பவர், சொன்ன தேதியில் ஸ்பாட்டுக்குப் போயிருக்கிறார். எப்படி தெரியுமா.. பாலா சொன்ன நேரத்துக்குப் போகாமல், 3 மணி நேரம் தாமதமாக, தனது படை பரிவாரங்களுடன் போயிருக்கிறார். அங்கு இவரது கைத்தடிகள் செய்த அலம்பல், பவர் பார்க்கும் போதெல்லாம் கைத்தட்டி விசிலடிக்க.. கடுப்பான பாலா தனது ரியலிட்டி டீஸரில் காட்டிய கோபத்தை நிஜமாகவே காட்ட, தலை தெறிக்க ஓடியிருக்கிறார்கள். இன்னும் ஏன்யா நிக்கிறே கிளம்பு கிளம்பு..என்று சவுண்ட் விட, சப்த நாடியும் அடங்கிப் போய் கிளம்பினாராம் பவரு
சூர்யாவின் அகரம் பவுண்டேசனை பார்வையிட்ட ஹன்சிகா |
சூர்யா தான் நடத்திவரும் அகரம் பவுண்டேசன் மூலம் ஏழைக்குழந்தைகளின் நலன், கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவ செல்வுகள் போன்ற சமூக சேவையில் ஈடுபடுவது அனைவரும் தெரிந்ததே. தன்னுடைய அகரம் பவுண்டேசனை க்க ஹன்சிகாவை அழைத்து சென்றுள்ளார் சூர்யா. ஹன்சிகா சூர்யாவுடன் சென்று பார்த்தபின் அசந்தே போய்விட்டாராம். நிறைய குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த சூர்யா மீது அவருக்கு மிகுந்த மரியாதை உண்டாகிவிட்டது. அவரிடம் தானும் ஏழைக்குழந்தைகளை தத்தெடுக்கும் பணியில் ஈடுபட்டதை சூர்யாவிடம் கூறினாராம். மேலும் அகரம் பவுண்டேஎஷனின் கிளையை மும்பையில் திறக்க தான் விரும்புவதாகவும் அதற்கு சூர்யா ஒத்துழைக்க வேண்டும் தனது விருப்பத்தை தெரிவித்தாராம். |
பின்னர் சூர்யாவுடன் சென்று சிவகுமார் மற்றும் ஜோதிகாவிடம் தன்னுடைய ஆசையை கூறினாராம் ஹன்சிகா. ஜோதிகாவுக்கு இதில் மிகுந்த சந்தோஷம் என்று கூறப்படுகிறது |
ஞாயிறு, மார்ச் 17, 2013
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே?
என் அன்பு நண்பனும் வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் தற்போது பாரிஸைப் பதிவிடமாகவும் கொண்ட நாகையா.மகேந்திரன் பிரபல வர்த்தகர் அவர்களின் மறைவு அவரை நேசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும்.என் இதயம் நிறைந்து நிற்கும் அவனுக்காய் இந்தப் பாடல்.அவன் அடிக்கடி விரும்பி என்னைக்கேட்கும் பாடல்.
கவிஞர் வைரமுத்துவின் தந்தை காலமானார்
கவிஞர் வைரமுத்துவின் தந்தை ராமசாமி(வயது 82) தேவர் உடல்நலக்குறைவால் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பகல் 12.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். ராமசாமி தேவர் உடல் வடுகபட்டியில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. தகவல் அறிந்து கவிஞர் வைரமுத்து குடும்பத்தினர் வடுகபட்டி விரைகிறார்கள். இன்று(ஞாயிற்றுக்கிழமை) பகல் இறுதி சடங்கு நடக்கிறது. மரணம் அடைந்த ராமசாமி தேவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், கவிஞர் வைரமுத்து, பாண்டியன் என இருமகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
கிராமத்து வேடத்தில் கலக்கும் விஜய்
ஜில்லா படத்தில் விஜய், மோகன்லால் சேர்ந்து வரும் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை கவரும் என இயக்குனர் நேசன் தெரிவித்துள்ளார். நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிக்கும் படம் ஜில்லா. படம் பற்றி நேசன் கூறுகையில், ஒரே படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் பணிபுரிவது சவாலான விஷயம். என் வேலையில் நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நடிகர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். அவர்களை திரையில் நான் எப்படி காண்பிக்கிறேன் என்பதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். படத்தின் படப்பிடிப்பு மதுரை, சென்னை மற்றும் ஆந்திராவில் நடக்கும். படத்தின் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் ஜில்லா பொங்கல் விருந்தாக வெளிவரும் என தெரிவித்துள்ளார். சூப்பர் குட் பிலிம்சின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.
3 வருடங்களுக்கு பிறகு வருகிறது கந்தா
மூன்று வருடங்களுக்கு பிறகு ஒருவழியாக திரைக்கு வரவிருக்கிறது கந்தா. எழுத்தாளர் பாபு கே.விஸ்வநாத்(திருவாரூர் பாபு) இயக்கிய படம் கந்தா. வி.பழனிவேல் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கரண், மித்ரா குரியன், ராஜேஷ் நடித்துள்ளனர். வெளிநாட்டில் படித்து விட்டு சொந்த ஊரான தஞ்சாவூருக்கு திரும்பும் கரண், அங்கு நடக்கும் தாதாக்கள் கொட்டத்தை அடக்குவதுதான் கதை. படம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. தயாரிப்பாளருக்கு பணப் பிரச்னை அதனால் படம் வெளியாவது தள்ளிப்போனது. கரண் சம்பள பாக்கியை கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் இப்படி பல பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு படம் கிடப்பில் கிடந்தது. இயக்குனர் பாபு கே.விஸ்வநாத்தும் இந்தப் படத்தை கை கழுவிட்டு "தேரடிவீதி" என்ற அடுத்த படத்தை இயக்கச் சென்று விட்டார். இப்போது தயாரிப்பாளர் ஒருவழியாக பிரச்னைகளை சமாளித்து வருகிற 22ஆம் திகதி படத்தை ரிலீஸ் செய்கிறார்.
கதாநாயகனாக வலம் வரும் தங்கவேலுவின் பேரன்
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் தங்கவேலுவின் மகள் வழிப் பேரன் அஸ்வின் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவர் நடிக்கும் படத்தின் பெயர் "ஆயுள் ரேகை நீயடி". புதுமுகம் தர்ஷிதா ஹீரோயின், இப்படத்தை செல்வகுமார் இயக்குகிறார். "ஒரு பெண்ணால் ஒருவனை வாழ வைக்கவும் முடியும், ஒருவனை அழிக்கவும் முடியும்” என்கின்ற கருத்தை கமர்ஷியல் படமாக தயாரிக்கிறோம். படத்துக்காக ஹீரோ தேடியபோது ஆடிசனுக்கு வந்தவர் தான் அஸ்வின். அவர் தேர்வான பிறகுதான் தான் தங்கவேலுவின் பேரன் என்பதையே சொன்னார். அவரது நேர்மை எங்களுக்கு பிடிச்சிருந்தது. நல்ல ஹீரோவா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் இயக்குனர் செல்வகுமார்.
இயந்திரங்கள் தான் இனி இசையமைக்கும்: இளையராஜா
தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகள் லட்சுமி மஞ்சு தெலுங்கில் "கொண்டேலு கோதாவரி" என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். கடந்த 8ம் திகதி வெளிவந்த இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனை தமிழ் நாட்டைச் சேர்ந்த குமார் என்பவர் இயக்கி உள்ளார். ஆதி, டாப்ஸி, லட்சுமி மஞ்சு, சந்தீப் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். பாடல்கள் தெலுங்கில் ஹிட்டானது. இதன் பாடல் சிடிக்கள் ஒரு லட்சத்தை தாண்டி விற்பனையாகி உள்ளது. இதற்கான பிளாட்டினம் டிஸ்க்கை பெற்றுள்ளது. இதனை லட்சுமி மஞ்சு, டாப்ஸி ஆகியோர் இளையராஜாவிடம் வழங்கினர். பின்னர் இளையராஜா நிருபர்களிடம் கூறியதாவது: இந்தப் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் லைவ் மியூசிக் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இசை கலைஞர்களைவிட இசை கருவிகளை கொண்டே இசை அமைக்கப்பட்டு வருகிறது. லைவ் மியூசிக் எனக்கு பிறகு யாரும் செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன். லாஸ் ஏஞ்சல்சில் நான் நடத்திய கச்சேரியில் நூற்றுக் கணக்கான இசை கலைஞர்கள் பங்கேற்றார்கள். இனி இதுபோன்ற கச்சேரியை நீங்கள் கேட்க முடியாது. காரணம் இனி இசை கலைஞர்களை கொண்டு யாரும் கச்சேரி நடத்த மாட்டார்கள். இதுதான் கடைசி கச்சேரி என்றேன். ரசிகர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள், இசைதான் மாறியிருக்கிறது என்றார்
வியாழன், மார்ச் 14, 2013
'வெள்ளச்சி படம்' ஒரு பார்வை
தந்தையால் சின்னா பின்னமாகும் ஒரு இளைஞனின் காதல்கதை.. பால் வியாபாரம் செய்பவர் செவ்வாளை. இவரது ஒரே மகன் பிண்டு. செவ்வாளை பல பெண்களுடன் தகாத உறவு வைத்து பணத்தை செலவிடுகிறார். இதை பிண்டு கண்டிக்கிறார். கள்ளக்காதலியின் கணவனிடமும் தந்தையை மாட்டி விடுகிறார். இதனால் இருவருக்கும் மோதல்.. அதே ஊரில் பிழைக்க வரும் சுசித்ரா உன்னியை பிண்டுக்கு பிடித்துபோக காதல்.. சுசித்ரா உன்னிக்கு பண உதவி செய்து படிக்க வைக்கிறார். பிண்டுவின் நல்ல குணம் சுசித்ரா உன்னியையும் காதல்பட வைக்கிறது. இவர்கள் காதல் பெற்றோருக்கு தெரிய எதிர்க்கின்றனர். காதலை பிரிக்க பிண்டு மீதான வன்மத்தை மனதில் வைத்து அவர் தந்தையே கொடூர திட்டம் வகுக்கிறார். அதன் பிறகு நடப்பது உயிரை உலுக்கும் கிளைமாக்ஸ்.. பாண்டுவின் மகன் பிண்டு நாயகனாக அறிமுகமாகியுள்ள படம். தந்தையின் கொடுமையில் சிக்கி ஆரம்பத்தில் அனுதாபம் அள்ளுகிறார். பிறகு ரியல் எஸ்டேட் அதிபராகி வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமும் காதலில் உயிர்ப்பும் காட்டுகிறார். வெள்ளச்சியாக வரும் சுசித்ரா உன்னி சிரிப்பும் முறைப்புமாய் வசீகரிக்கிறார். செவ்வாளை வில்லத்தனத்தில் குரூரம். சுசித்ரா உன்னி தந்தையாக வரும் கிருஷ்ணமூர்த்தி நேர்த்தி. நான்கு மனைவிகளின் கணவராக வரும் ரியல் எஸ்டேட் அதிபர் மதுமாறன் கலகலப்பூட்டுகிறார். பள்ளி ஆசிரியராக வரும் பாண்டு நிறைவு. கிராமத்து கதையை யதார்த்த முகங்களோடு விறுவிறுப்பாக காட்சி படுத்தி உள்ளார் இயக்குனர் வேலுவிஸ்வநாத். ஆரம்ப காட்சிகள் வலுவின்றி நகர்ந்தாலும் பிற் பகுதி கதை காதலும் மோதலுமாய் வேகம் பிடிக்கிறது. சாய் நட்ராஜ் ஒளிப்பதிவில் கிராமிய அழகு. பவதாரணி இசையில் பாடல்கள் இனிமை
ஆப்பிரிக்காவில் வடிவேலு என்ற ஒரு படத்தை வெற்றி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
வடிவேலுவை ஹீரோவாக வைத்து ஆப்பிரிக்காவில் வடிவேலு என்ற ஒரு படத்தை வெற்றி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வைகைப்புயலுடன் நிறைய படங்களில் பணியாற்றிய ரவிக்குமாரும் இந்த புதிய வாய்ப்பு பற்றி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்து பற்றி புத்தகம் எழுதிய டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் தன்னிடம் ஒரு கதையை கூறியதகாவும், வடிவேலுவிடமே இதுபற்றி அவர் பேசியுள்ளதாகவும் தெரிகிறது. இந்த கதை தனக்கு பிடித்திருப்பதாகக் கூறியுள்ள ரவிக்குமார். இந்த படம் பிரம்மாண்டமான தயாரிப்பாகவே இருக்கும் என்பதால் அதற்குத் தகுந்த தயாரிப்பாளர் தேவை. இன்னும் இந்தப் புதிய படம் குறித்த விவகாரம் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது. இது ஒரு பிரம்மாண்டத் தயாரிப்பு என்பதால் இதுபற்றி இப்போதைக்கு எதுவும் உறுதியாக கூறிவிட முடியாது என்று கூறியுள்ளார் ரவிக்குமார். பவர் ஸ்டார், சந்தானம் என்று போய்க்கொண்டிருக்கும் இண்டஸ்ட்ரியில் வடிவேலுவை வைத்து ரிஸ்க் எட்க்க தயாரிப்பாளர் யாராவது தயாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
ஆர்யாவிடமிருந்து அனுஷ்காவுக்கு பிரியாணி விருந்து
நடிகர் ஆர்யா, பிரியாணி சமைப்பதில் கெட்டிக்காரராம். தனக்கு நெருக்கமானவர்களுக்கு, தன் வீட்டிலிருந்து ஸ்பெஷலாக பிரியாணி செய்து கொண்டு வந்து, கொடுக்கும் வழக்கத்தை பின்பற்றி வருகிறார். ஏற்கனவே, தனக்கு நெருக்கமான, நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.தற்போது, செல்வராகவன் இயக்கத்தில், "இரண்டாம் உலகம் படத்தில் நடித்து வருகிறார், ஆர்யா. இதில், இவருக்கு ஜோடியாக, அனுஷ்கா நடிக்கிறார். இதனால், இவர்களுக்கு இடையே நட்பு ஏற்படவே, அனுஷ்காவுக்கு அடிக்கடி பிரியாணி விருந்து கொடுத்து அசத்துகிறாராம், ஆர்யா. அனுஷ்காவும், பிரியாணி சுவை, சூப்பராக இருப்பதாக, சப்புக் கொட்டியபடியே, ஆர்யாவுக்கு பாராட்டு மழை பொழிகிறாராம். இதனால், உற்சாகமடைந்துள்ள ஆர்யா, பிரியாணியின் சுவையை மேலும் அதிகரிப்பது குறித்து, தீவிரமாக யோசித்து வருகிறாராம்
புதன், மார்ச் 13, 2013
ஜில்லா படத்தில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு சிபாரிசு செய்த விஜய்
ஜில்லா படத்தில் நடிக்க வைக்க, காஜல் அகர்வாலுக்கு விஜய் சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது. விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடித்தார் காஜல் அகர்வால். இந்த படம் கடந்த தீபாவளிக்கு ரிலீசானது. இந்நிலையில் விஜய் நடிக்கும் ஜில்லா படத்தை நேசன் இயக்குகிறார். இப்படத்திலும் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சமீபகாலமாக முன்னணி ஹீரோக்கள், ஒரே ஹீரோயினை தங்கள் படங்களில் தொடர்வதை விரும்புவதில்லை. ஒரே ஜோடியை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்தால் போர் ஆகிவிடுவார்கள் என்பதே காரணம். வேலாயுதம் படத்திலிருந்து விஜய்யும் இந்த பார்முலாவையே பின்பற்றி வந்தார். ஆனால் இப்போது அந்த பார்முலாவை உடைக்கும் விதமாக காஜல் அகர்வாலை தனது படத்துக்கு தேர்வு செய்திருக்கிறார். இதற்கு அவர்கள் இடையிலான நட்புதான் காரணம் என திரையுலகினர் கூறுகின்றனர். துப்பாக்கி படத்தில் நடித்தபோது, காஜல் அகர்வாலின் துரு துரு நடவடிக்கைகள் விஜய்யை கவர்ந்துவிட்டதாம். அத்துடன் அவர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தாருடன் நட்பாக பழகினாராம். இந்த காரணங்களாலே அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன் ஒரு கட்டத்தில் விஜய்யின் படங்களில் தொடர்ந்து த்ரிஷா நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய், மார்ச் 12, 2013
சூர்யாவை திரும்பிப்பார்கக் வைத்தவன் நான். எனக்கே ஆப்பா
நீதானே என் பொன்வசந்தம் படத்தை இயக்கிய கெளதம்மேனன், அந்த பட தோல்வியினால் அடுத்து சூர்யாவை வைத்து துப்பறியும் ஆனந்த் என்ற படத்தை இயக்க திட்டமிட்டார். அதில் நடிக்க கால்சீட் தருமாறும் சூர்யாவிடம் பேசினார். ஆனால், அதற்கு முன்பே சூர்யாவிடம் கால்சீட் கேட்டிருந்த லிங்குசாமியோ தனக்கே கால்சீட் தர வேண்டும் என்று சூர்யாவை துரத்தினார். இப்படி கெளதம், லிங்குசாமிக்கிடையே சூர்யாவின் கால்சீட்டை யார் முதலில் கைப்பற்றுவது என்கிற பலப்பரீட்சை நடந்து வந்தது. ஆனால் சூர்யாவோ, இப்போது இருக்கிற சூழ்நிலையில், கெளதம்மேனனைவிட, லிங்குசாமிதான் சரியான ஆள். படம் சுமாராக இருந்தாலும், பப்ளிசிட்டியைக் கொண்டே நிறுத்தி விடுவார் என்று முடிவு செய்து, சிங்கம்2 வை முடித்து விட்டு அவர் படத்தில் நடிப்பதாக கால்சீட் கொடுத்து விட்டார். இதனால் அப்செட்டாகி விட்டார் கெளதம்மேனன். காக்க காக்க என்ற படத்தை கொடுத்து இந்த சூர்யாவை திரும்பிப்பார்கக் வைத்தவன் நான். எனக்கே ஆப்பா என்று ஆபாகி போயிருந்தார். ஆனால் லிங்குசாமிக்குத்தான் மனசு கேட்கவில்லை. தன்னைப்போன்ற ஒரு டைரக்டர் அவர். கமல் மாதிரி பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்தவர், இன்றைக்கு ஒடிந்து போயிருக்கிறார். அவருக்கு ஏதாவது ஒரு வகையில் கைகொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர். தனது திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் ஐந்து படங்களில் ஒரு படத்தை கெளதம்மேனனை இயக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம். இதனால் அதுவரை லிங்குசாமியை எதிரி போல் பார்த்து வந்த கெளதம், இப்போது என் நண்பன போல யாரு மச்சான் என்று பாட்டெடுக்கத் தொடங்கியிருக்கிறார்
விஜய்யிடம் முகம் கொடுத்து பேசாமல் விலகி நிற்கும் அமலாபால்..!
விஜய்யிடம் முகம் கொடுத்து பேசாமல் விலகி நிற்கும் அமலாபால்..! | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வீரசேகரன் படத்தில் அறிமுகமான அமலாபால், அதையடுத்து சிந்து சமவெளி என்ற படத்தில் காமக்கொடூர நடிகையாக அவதரித்தார். அதன் பின்னர் மைனா அவருக்கு கைகொடுத்ததால் நல்ல நடிகை என்ற முத்திரை விழுந்தது. அதையடுத்து, மார்க்கெட்டை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர், தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி போன்ற சில படங்களுக்குப்பிறகு, சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நிமிர்ந்து நில் என்ற படத்தில் நடித்து வந்தார். அந்த நேரம் பார்த்து அவரே எதிர்பாராத வகையில் அவரது அபிமானத்துக்குரிய டைரக்டர் விஜய் இயக்கும் தலைவா படத்தில் இளையதளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அரிய வாய்ப்பினை பெற்றார். |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அமலாபாலின் கேரியரில் தலைவா மிக முக்கியமான படம் என்பதால், தெலுங்கு படங்களுக்கு கொடுத்திருந்த கால்சீட்டைகூட அட்ஜஸ்ட் பண்ணி வாங்கி தலைவாவில் கமிட்டானார். இதனால் திடுதிப்பென்று விஜய்யுடன் அமலாபால் ஜோடி சேர்ந்ததால் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளெல்லாம் ஆச்சரியமாய் அவரை பார்த்தனர். ஆனால் அந்த ஆச்சர்யம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. இப்போது அதே படத்தில் முக்கிய நாயகியாக பாலிவுட் நடிகை ராகினி நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் அமலாபால். ஆனால், இந்த நேரத்தில் அவரது கோலிவுட் அபிமானிகள் ஆளாளுக்கு போன் போட்டு, அப்படியா சங்கதி? இன்னொரு நடிகையும் இந்த படத்தில் இருக்கிறாராமே? என்று அமலாவுக்கு போன்போட்டு துக்கம் விசாரிப்பது போல விசாரிக்கிறார்களாம். இதனால் சில தினங்களாக ஏதோ பேசி சமாளித்து வந்த நடிகை, இப்போது தனது போனையே சுவிச் ஆப் செய்து விட்டாராம். |
வெள்ளி, மார்ச் 08, 2013
சூர்யா - சமந்தா ஜோடி சேரும் புதிய படம்
சிங்கம் 2-வுக்குப் பிறகு சூர்யா லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது. சூர்யாவின் கால்ஷீட்டை பெறுவதில் லிங்குசாமிக்கும், கௌதமுக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதி வெற்றி லிங்குசாமிக்கு. அவரின் திருப்பதி பிரதர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கும் எனத் தெரிகிறது. இன்னும் பெயரிடப்படாத படத்தில் ஹீரோயினாக நடிக்க சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனை சமந்தாவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். 'நீதானே என் பொன்வசந்தம்' படத்துக்குப் பிறகு சமந்தா நடிக்கப் போகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
டாப்சியின் தங்கையை அறிமுகப்படுத்த போவது கவுதம் மேனனா.. வெற்றிமாறனா..
பஞ்சாப் ரசகுல்லா டாப்ஸி பன்னு. இப்போது தென்னிந்திய சினிமாவின் ஸ்வீட் பன்னு. சாப்ட்வேர் என்ஜினீயரான டாப்சி அழகிப் போட்டி ஒன்றில் டைட்டில் பெற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். ஆடுகளத்தில் நடிக்க த்ரிஷா தயங்க வெற்றிமாறன் டாப்ஸி அழைத்து வந்து வெள்ளாவி தேவதையாக்கினார். இப்போது டாப்ஸி தமிழ், தெலுங்கு, இந்தியில் ரொம்ப பிசி. தமிழில் அஜீத்துடன் வலை, ராகவா லாரன்சுடன் முனி&3, மறந்தேன் மன்னித்தேன், தெலுங்கில் ஷேடோஸ். ஜாக்பாட், குண்டலா கோதவரி, இந்தியில் சஸ்மே படோர் என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார். அக்காவின் வளர்ச்சியை பார்த்த தங்கை ஷாகுனுக்கும் நடிக்கும் ஆசை வந்து விட்டது. அவரும் தான் பார்த்து வந்த சாப்ட்வேர் வேலையை உதறித் தள்ளிவிட்டு அக்காவுடன் பொது நிகழ்ச்சிகளுக்கு கலக்கலாக வருவது, விதவிதமான போட்டோக்கள் எடுத்து இணைய தளத்தில் விடுவது என்ற நடிப்புக்கான வேலையில் இறங்கி விட்டார். அக்காவைப் போலவே தங்கையும் விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாகிறார். இதுகுறித்து டாப்ஸி கூறும்போது, ஷாகுன் என்னை விட அழகானவள். அவளுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. வீட்டிலும் ஓகே சொல்லிவிட்டார்கள். அவள் நடிக்க வந்தாலும் எனக்கு போட்டியாக வந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன் என்கிறார். கவுதம் மேனன் தான் இயக்கப்போகும் அடுத்த படத்தில் ஷாகுனை நடிக்க வைக்கலாம் என்றும், வெற்றிமாறன் இயக்கும் அடுத்த தனுஷ் படத்தில் ஷாகுன் ஹீரோயின் ஆகலாம் என்றும் சொல்கிறார்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)