திங்கள், ஏப்ரல் 29, 2013

பிரியாணியை சாப்பிட்டு விட்டு அடுத்த சில நாட்கள் விரதமிருப்பாராம் - த்ரிஷா

News Serviceஎன்னதான் நடிகைகள் லட்சம் லட்சமாக சம்பாதித்தாலும் அவர்களால் ஆசைப்பட்ட பொருளை சாப்பிட முடியாது. எல்லாம் இருந்தும் வாயக்கட்டி வயிற்றக்கட்டி வாழ்ந்து கொண்டிருப்பார்கள். கொஞ்சம் அசந்தாலும் உடம்பு பெருத்து விடும் என்பதால், தினமும் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்பதை கடைபிடித்து வருவார்கள். ஆனால், த்ரிஷா மற்ற நடிகைகள் மாதிரி உடம்பு பெருத்து விடுமே என்று கவலைப்படுவதெல்லாம் இல்லையாம். முக்கியமாக பிரியாணியை கண்ணில் பார்த்து விட்டால், செம கட்டு கட்டி விடுவாராம். அந்த அளவுக்கு பிரியாணி பிரியையாம் த்ரிஷா. ஆனால், அப்படி சாப்பிடுபவர், உடம்பில் கொழுப்பு சேர்ந்து விடக்கூடாதே என்பதற்காக அடுத்த சில நாட்கள் விரதமிருப்பவர், கடினமான உடற்பயிற்சியும் செய்வாராம். அதனால்தான், த்ரிஷாவின் உடல்கட்டு அவரது கண்ட்ரோலில் இருக்கிறதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.