ஞாயிறு, மார்ச் 17, 2013

கதாநாயகனாக வலம் வரும் தங்கவேலுவின் பேரன்

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் தங்கவேலுவின் மகள் வழிப் பேரன் அஸ்வின் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவர் நடிக்கும் படத்தின் பெயர் "ஆயுள் ரேகை நீயடி". புதுமுகம் தர்ஷிதா ஹீரோயின், இப்படத்தை செல்வகுமார் இயக்குகிறார். "ஒரு பெண்ணால் ஒருவனை வாழ வைக்கவும் முடியும், ஒருவனை அழிக்கவும் முடியும்” என்கின்ற கருத்தை கமர்ஷியல் படமாக தயாரிக்கிறோம். படத்துக்காக ஹீரோ தேடியபோது ஆடிசனுக்கு வந்தவர் தான் அஸ்வின். அவர் தேர்வான பிறகுதான் தான் தங்கவேலுவின் பேரன் என்பதையே சொன்னார். அவரது நேர்மை எங்களுக்கு பிடிச்சிருந்தது. நல்ல ஹீரோவா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் இயக்குனர் செல்வகுமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.