ஞாயிறு, மார்ச் 17, 2013

3 வருடங்களுக்கு பிறகு வருகிறது கந்தா

மூன்று வருடங்களுக்கு பிறகு ஒருவழியாக திரைக்கு வரவிருக்கிறது கந்தா. எழுத்தாளர் பாபு கே.விஸ்வநாத்(திருவாரூர் பாபு) இயக்கிய படம் கந்தா. வி.பழனிவேல் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கரண், மித்ரா குரியன், ராஜேஷ் நடித்துள்ளனர். வெளிநாட்டில் படித்து விட்டு சொந்த ஊரான தஞ்சாவூருக்கு திரும்பும் கரண், அங்கு நடக்கும் தாதாக்கள் கொட்டத்தை அடக்குவதுதான் கதை. படம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. தயாரிப்பாளருக்கு பணப் பிரச்னை அதனால் படம் வெளியாவது தள்ளிப்போனது. கரண் சம்பள பாக்கியை கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் இப்படி பல பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு படம் கிடப்பில் கிடந்தது. இயக்குனர் பாபு கே.விஸ்வநாத்தும் இந்தப் படத்தை கை கழுவிட்டு "தேரடிவீதி" என்ற அடுத்த படத்தை இயக்கச் சென்று விட்டார். இப்போது தயாரிப்பாளர் ஒருவழியாக பிரச்னைகளை சமாளித்து வருகிற 22ஆம் திகதி படத்தை ரிலீஸ் செய்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.