இராஜதந்திரச் சமர் என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க வல்லரசு கொண்டுவரவுள்ள பிரேரணையை இந்தியா இம்முறை ஆதரிக்குமென அறிய முடிகின்றது. ஜெனிவா இராஜதந்திரச் சமர் ஆரம்பமாவதற்கு முன்னரே அங்கு சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை விடயத்தில் டில்லியின் ஆதரவைப் பெறுவதற்கு வாஷிங்டனும், கொழும்பும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் நிலையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, கடந்தமுறை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த காட்டமான பிரேரணைைய வலுவிலக்கச் செய்த இந்தியா, இம்முறையும் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் நகலை அமெரிக்காவிடம் கோரியுள்ளது என அறியமுடிகின்றது. அண்மையில் நடைபெற்ற இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் எட்டாவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் டில்லி சென்றிருந்தவேளை, ஜெனிவா பிரேரணையை தமது அரசு ஆதரிக்கவுள்ள விடயத்தை இந்திய அதிகாரிகள் கோடிகாட்டியுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது. கடந்தகால சம்பவங்கள் தொடர்பில் இலங்கை பொறுப்புக்கூறும் கடப்பாட்டை முழுமையாக வெளிப்படுத்தும்வரை தாம் சர்வதேசத்தின் பக்கம் நிற்கவேண்டிய நிலை உள்ளது என்றும் பீரிஸிடம் இந்திய உயர்மட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும், தமது பக்க நியாயங்களைத் தொடர்ச்சியாக இந்தியாவிடம் எடுத்துரைக்கும் இலங்கை அரசு, அந்நாட்டின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.