வியாழன், ஜனவரி 24, 2013

உலக நாடுகளில் விஸ்வரூபம் வெளியிடப்படும்

தமிழக அரசினால் நேற்று விஸ்வரூபம் திரைப்படம் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம் தலைவர்களின் பலத்த எதிர்ப்பின் காரணமாக தமிழக அரசினால் 15 நாட்கள் தடை செய்யப்பட்டிருந்த விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடையை சென்னை உயர் நீதிமன்றம் சற்று முன்னர் மீளப்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் உத்தியோகபூர்வமற்ற தகவல்களை வெளியிட்டுள்ளது. குறித்த படி எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை தவிர்ந்த ஏனைய உலக நாடுகளில் விஸ்வரூபம் வெளியிடப்படும் என தற்போது தெரிவிக்கப்படுகிறது. (இணைப்பு 2) தற்போதைய உத்தியோகபூர்வ அறிவித்தல்களின் படி 28ஆம் திகதி வரையில் விஸ்வரூபம் திரைப்படத்தினை தமிழகத்தில் திரையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை இலங்கையில் காலவரையின்றி இப்படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படத்தின் தெலுங்கு பதிப்பு நாளை உலகம் முழுவதும் வெளியாகலாம் ஏனெனில் அப்பதிப்புக்கு எதுவிதமான தடைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.