இலங்கையின் 65வது சுகந்திர தினத்தை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் 9 கைதிகள் இன்று (04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட கைதிகளில் சிறு குற்றமிழைத்து தண்டப்பம் கட்டத் தவறிய ஒன்பது சிறைக்கைதிகள் யாழ். சிறைச்சாலை பிரதம அட்தியட்சகர் முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் எட்டு ஆண் கைதிகளும் ஒரு பெண்கைதியும் அடங்குவர். இந்த நிகழ்வில் யாழ்.சிறைச்சாலை பிரதம ஜெயிலர் இந்திரகுமார் மற்றும் சிறைச்சாலை
உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.