வெள்ளி, ஜனவரி 04, 2013

இலங்கையில் ஏழு நீதிபதிகளுக்கு இடமாற்றங்கள்: பிரதம நீதியரசர் நடவடிக்கை

இலங்கையின் பிரதான நீதிபதிகளை இடமாற்றம் செய்ய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தீர்மானம் எடுத்துள்ளார்.எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதியில் இருந்து அமுலாகும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கம்பஹா சிவில்மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சிரோமி பெரேரா, அம்பாறை மேல்நீதிமன்ற நீதிபதி அநுரகுமார, அநுரதபுரம் சிவில் மேன்முறையீட்டு நீதிபதி நிசங்க பந்துல, அம்பாறை சிவில் மேன்முறையீட்டு நீதிபதி சமன் விக்கிரமசூரிய, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க, அவசாவளை சிவில் நீதிமன்ற நீதிபதி இராங்கனி பெரேரா, கல்கிஸ்ஸை சிவில் நீதிமன்ற நீதிபதி எஸ் ரபீக் ஆகியோரே இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.