வியாழன், நவம்பர் 08, 2012

ஜனவரியில் நவநீதம்பிள்ளை குழு கொழும்புக்கு படையெடுப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேர­­வை­யின் 20 ஆவது ஜெனிவா கூட்டத்­தொடர் எதிர்­வரும் மார்ச் மாதம் ஆரம்­பமாவதற்கு முன்னர் மனித உரிமை­கள் பேர­வை­யின் ஆணையாளர் நவ­நீதம்­பிள்ளை இலங்கைக்கு அவ­சர விஜ­­யம் ஒன்­றை மேற்கொண்டு வரு­கிறார். எதிர்வரும் ஜனவரி மாதம்விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அவர், நல்லிணக்க ஆணைக்­குழு­வின் பரிந்­துரைகள் மற்றும் இலங்கையின் மனித உரிமை நிலை­வரங்கள் குறித்து முக்கிய ஆய்வு ஒன்றை மேற்கொள்ள­வுள்ளார். ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை­யில் அதன் ஆணையாளர் நவநீதம்­பிள்­ளையை மு.க.ஸ்டாலினும், நாடா­ளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.­பாலுவும் நேற்றுமுன்தினம் செவ்­வாய்க்கிழமை சந்தித்தனர். அப்போது, டெசோ மாநாட்டுத் தீர்­மானங்களின் அடிப்படையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி கையெ­ழுத்­திட்டு அனுப்பிய அறிக்­கையை அவரிடம் கையளித்தனர். சுமார் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஈழத் தமிழர்கள் விவ­காரம் தொடர்பாக மு.க.ஸ்டா­லின் எடுத்துரைத்துள்ளார். இதன்போதே மேற்கண்ட தக­வலை தி.மு.கவின் பொரு­ளாளர் மு.க.ஸ்டா­லினிடம் நவநீதம்பிள்ளை உறுதிப்­படுத்­தியுள்­ளார். இதுதொடர்பாக தி.மு.க. தலை­மைக் கழகம் வெளியிட்ட அறிக்­கை­யில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வரு­மாறு - இலங்கையில் நடைபெற்ற போரில் 90 ஆயிரம் பேர் விதவை­களாக்கப்பட்டு, பரிதாப நிலையில் இருக்கின்றனர். தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றனர். அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். போரின் போது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர் என அறிவிக்கப்­பட்ட ஒரு இலட்சத்து 25 ஆயிரம் தமிழர்களை மீண்டும் அவர்கள் பகுதிகளில் குடியமர்த்த வேண்டும் என ஸ்டாலின் எடுத்துரைத்தார். ஸ்டாலின் அளித்த ஆவணங்கள் முக்கியமானவை என்று நவநீதம் கூறினார். மேலும், இலங்கை போர்க் குற்­றங்கள் மற்றும் நல்லிணக்க ஆணை­யப் பரிந்துரைகள் தொடர்பாக மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானம் அமெரிக்கா கொண்டுவந்து இந்தியா ஆதரித்த­தாகும். இது எந்தளவுக்கு செயல்படுத்­தப்படுகிறது என்பது தொடர்பாக, ஐ.நா. மனித உரிமை பேரவை மூலம் ஆய்வு செய்ய உள்ளோம். எனது (நவநீதம்பிள்ளை) தலை­மையில் குழு ஒன்று ஜனவரி மாதம் இலங்கைக்குச் சென்று மேற்பார்வை­யிடும் என்று நவநீதம்பிள்ளை கூறி­னார். - இப்படி அந்த அறிக்கையில் தெரி­விக்­கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.