கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாடு தற்போது பொய்யாகி விட்டது என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச சூழ்ச்சிகள் மற்றும் பிரிவினைவாத சக்திகள் போன்ற பாரிய சவால்களை ௭திர்கொண்டே அரசு தேர்தலை சந்தித்தது. இதில் பாரிய வெற்றியையும் பெற்றுக்கொண்டுள்ளது.
அநாவசியமான அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் அரசாங்கம் கூட்டணிக்கு செல்லக்கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு ௭திராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாரியளவிலான சவால்கள் காணப்பட்ட நிலையிலேயே கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் தேர்தல்கள் நடைபெற்றன.
கிழக்கு மாகாணம் தமிழ் மக்களின் பூர்வீக நிலம், தாயகம் என்றெல்லாம் பிரிவினைவாத சக்திகள் பிரசாரம் செய்தன. ஆனால் இன்று அனைத்தும் பொய்யாகிவிட்டன.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும் தொகையானோர் தேர்தலில் வாக்களித்தனர் இவர்கள் பிரிவினைவாத கொள் கைகளுக்கு அனுமதி வழங்கவில் லை. அரசாங்கமும் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என சம்பிக்க குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.