வெள்ளி, ஜனவரி 04, 2013

மனைவியுடன் சண்டையிட்டு கைக்குழந்தையை அடித்து உதைத்து கொன்ற தந்தை

ஒரு வயது மற்றும் நான்கு மாதம் நிறைந்த தனது பெண் குழந்தையை தந்தை, கை மற்றும் காலால் அடித்து - உதைத்து கொலை செய்த கொடூர சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பிலியந்தல மொரதன பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை கடற்படையில் பணிபுரியும் ஒருவரே இக்கொலையை புரிந்துள்ளார்.நேற்று இரவு இவரது வீட்டில் கணவன் - மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் கடும் ஆத்திரமடைந்த தந்தை தனது பெண் குழந்தையை அடித்து - உதைத்து கொலை செய்துள்ளார். தாக்குதலில் மூச்சுப்பேச்சை இழந்த குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.